Wednesday, September 10, 2014

                                                    கடமை
அர்ஜுன் தனது ஆட்டை கூட்டிக்கொண்டு நடக்க தொடங்கினான் . நடந்தான் , நடந்தான் , நடந்தான் 21 நாட்கள் நடந்தான் , பத்தாம் நாளே அவனது ஆடு இறந்துபோயிருந்தது . இருந்தும் நடந்தான் , நடந்தான் , நடந்தான் 201 வது நாள் தனது கல்லறையை அடையும் வரை நடந்தான் .
                                                                                    -கத்துகுட்டி                                                    



                                                         கட்

அர்ஜுனுக்கு சிறுவயதுதான் என்றாலும் ரொம்ப நாட்களாக கார்ரேசில்
பங்கேற்று வருகிறான் . இத்தனை நாட்களாக பங்கேற்று வந்தாலும் அவன்
இதுவரை வெற்றியை ருசித்ததேயில்லை . அன்று அவனுக்கு தனது ஸ்பான்சர் மூலம் கிடைத்த புது ரெட் ஃபெராரியில் தனது ரேசில் களமிறங்கினான் . ஐந்து
லேப் களை கொண்ட அந்த ரேசில் முதல் மூன்று லேப்களில் மூன்றாம் இடத்தை
தக்கவைத்துக்கொண்டு இருந்தான் . நான்காவது லேப்பின் ஆரம்பத்தில் ரேஸ் தளவாடத்தை சுற்றி போடப்பட்டிருந்த தடுப்பின் மீது எதிர்பாராதவிதமாக இடித்து இரண்டு மூன்று தடவை நிலை தடுமாறி தனது நிலைக்கு வந்தான் .  அதற்குள் அனைவரும் அவனை முன்னேறி போயிருந்தனர் . சைலன்சர் வேறு அடிபட்டு புகைந்துகொண்டிருந்தது . தீடிரென்று ஆக்ரோஷம் வந்தவனாய் இன்ஜினை ஸ்டார்ட் செய்து ஓட்டத் தொடங்கினான் . ஒவ்வொருவராக முன்னேறி கொண்டே சென்றான் . ஆறு , ஐந்து , நாலு , மூன்று , இரண்டு , ஒன்று என முன்னேறி முதல் இடத்தில் சென்று கொண்டிருந்தான் . கடைசி லேப்பின் வெற்றிக்கோட்டை மிக வேகமாக நெருங்கிக்கொண்டிருந்தான் கரண்ட் கட்டானது .

                                                                                           -கத்துக்குட்டி

No comments:

Post a Comment