கத்துக்குட்டி சிந்தனைகள்

                                                  எனது கீச்சுகள்
அவங்களுக்கு வாங்கி பழகிருச்சோ இல்லையோ
நமக்கு கொடுத்து பழகிருச்சு
#லஞ்சம்

எதார்த்த சோதிடர் ஷெல்வி
அடக்கடவுளே இதுல என்னடா எதார்த்தம் .....!!!

இப்போதெல்லாம் பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும்போது
ஏனோ குற்றவுணர்வு தோன்றுகிறது
(நான் வளர்கிறேனே மம்மி,...!!!)

ஆளில்லா வாரண்டாவைப்
பார்க்கும்பொழுதெல்லாம் தனிமை
பிடித்துக்கொள்கிறது.......,

கூச்ச சுபாவத்திலிருந்து விடுபட நினைக்கிறேன்
ஆனால் விடுபட கூச்சமாக இருக்கிறது,....!!

நமக்கு தெரிந்ததை பற்றிப் பேசினாலே
சொல்கிறார்கள் “சீன் போடாதே”

விமர்சகர்கள் விமர்சகர்களாகவே இருந்தால்
ரொம்ப நல்லது,........!!!!!

பொறுப்பை விமர்சிப்பவர்கள்
பொறுப்பை ஏற்றவுடன் விமர்சிக்கப்படுகிறார்கள்....

சுயமைதுனம் செய்யக்கூடாது என்று தினமும்
நினைக்கிறேன் சுயமைதுனம் செய்துமுடித்துவிட்டு.......!!!!

பாடப்புத்தகத்தை தவிர தமிழில் வேறு ஏதாவது புத்தகத்தை
படித்தால் நம்மை ஏதோ விசித்திர ஜந்து போல பார்க்கிறார்கள்......

தூக்கம்
             துன்பத்தை
                                துரத்துவது...!!!!!

என்னதான் TUBELIGHT , CFL LAMP , DECORATION LIGHT னு
கண்டுபிடிச்சாலும் இன்னும் லைட் எரியுதுனுதான் சொல்றாய்ங்க......????

தனது காதலியை நண்பன் தங்கச்சி என்றுதான் அறிமுகப்படுத்துகிறான்...!!!

விபச்சாரத்தையும் , விபச்சாரியையும் பற்றி தைரியமாக எழுதும் எழுத்தாளர்கள்
தங்களது மனைவியிடம் என்ன சொல்வார்கள்....???

அடியாட்களை இரக்கமின்றி கொன்று குவிக்கும் ஹீரோக்கள் ஏனோ
வில்லனை மன்னித்து விட்டு விடுகின்றனர்.........??????

சமீபத்திய கொடுமை : அடிவயிற்றில் மூத்திரத்துடன் ஒன் டூ ஒன் பேருந்தில் நான்கு மணி நேரப் பயணம் ...:-(

மானாட மயிலாடவில் 1 முதல் 8 வரையிலான எண்கள் பழுதாகிவிட்டன என்று நினைக்கிறேன் .........????

அதிசய ஒற்றுமை : கடற்கரை , பாலைவனம் இரண்டிலும் மணல்தான் ....!!!!

பின்சீட்டில் இருப்பவர் ஹாலிவுட் படத்தில் காமெடியனை தேடிக்கொண்டிருக்கிறார்.......!!!! # சினிமா தியேட்டர்

குழந்தைகளை யாரும் திருந்துவதற்காக அடிப்பதில்லை தங்கள்
ஆளுமையை வெளிப்படுத்தவே அடிக்கிறார்கள்....

கீர்த்தி , லஷ்மி , ஜோதி போன்ற பெயர்கள் திருநங்கைகளோ
ஆண் , பெண் இரண்டும் கலந்து உள்ளனவே ,.....!!!

போதை நன்றாக ஏறியவர்கள் சொல்வது ஒன்னுமே ஏறலை
இன்னொரு குவாட்டர் சொல்லேன்...........!!!!!!!

பள்ளிக்கூடம் நமக்கு கற்றுத்தந்த உருப்படியான விஷயம் எழுத்தை
வாசிக்க கற்றுத்தந்தது மட்டுமே.......!!!!!

ஆண்மை குறைவு விளம்பர போஸ்டர் ஒட்டியே நமக்கு ஆண்மைக்குறைவு
ஏற்பட்டுவிட்டது போல் உணரவைத்துவிட்டார்கள்,....#எங்கோ படித்தது..

புகை பிடிக்ககூடாது ,..புகையை யாராலும் பிடிக்க முடியாது வேண்டுமானால்
இழுத்துக்கொள்ளலாம் ....

வெளிப்பெண்களிடமே பேசியிராத ஆணுக்கு அக்கா , தங்கச்சி என்று நினைத்து
பேசினால் கூட நன்றாக தான் இருக்கும்,...!!!

காதலே கிடைக்காதவனுக்கு காதல் தோல்வி மட்டும் எப்படி கிடைக்கும் .
#டாட்

ஏமாறுவதைவிட தொலைப்பதை ஏற்றுக்கொள்வான் . # தமிழன்

பயத்தாலோ , என்னவோ புகார் கொடுக்க கூட காவல் நிலையம் செல்ல
நிறைய மக்கள் மறுக்கிறார்கள்...

புகார் செய்யப்பட்ட குற்றங்களே இன்னும் தீர்க்கப்படாத நிலையில் இன்னும்
புகார் செய்யப்படாமல் எவ்வளவு உள்ளதோ,...

பேருந்தில் செல்லும் போது ஓசிப்பத்திரிக்கை வாங்கி படிக்காதவர்களே இருக்க முடியாது ,..!! #வாசிப்பு பழக்கம் இல்லாவிட்டாலும் .

அப்படி என்ன பேருந்தில் மட்டும் வாசிப்பு பழக்கம் தலைத்தூக்குகிறது...

டைப் அடிக்கும்போது எப்படி இருந்தாலும்  ஓப்பி அடித்துவிடுகிறது
#கட்டை விரல்

மடியில் லேப்டாப்புடன் ஆண்மை குறைவுக்கான காரணத்தை தேடிக்கொண்டிருந்தான் .

நாவலில் வர்ணித்தலின் மூலமே எண்பது சதவீதம் பக்கங்களை எழுதி விடுகின்றனர் ,..

நாத்திகவாதி பிரச்சினை வரும்போது மட்டும் ஒரு கணம் கடவுளை மனசுக்குள் வேண்டிக்கொள்கிறான்.

பேய் மூடநம்பிக்கை என்றால் கடவுளும் மூடநம்பிக்கை தானே,...

தீமித்திருவிழாவில் யாருடைய கால்களும் புண்ணாவதில்லை
# ஆச்சரியம்

இப்போது சிகரெட் பிடிக்கும் பெண்களின் ஆயாக்கள் சளைத்தவர்கள் அல்ல
சுருட்டு பிடித்துக்கொண்டிருந்தார்கள் ...!!!

பலாச்சுளை நழுவி பாலில் விழுந்தது ,...
யாரும் இந்த காம்பினேஷனே ட்ரை பண்ணி பார்த்ததில்லை

இப்போது இருக்கும் ஆசிரியர்கள் பெரும்பாலும் கடைசி பெஞ்ச் மாணவனாக இருந்திருப்பார்கள்

சுகம் கொடுத்ததையே காலில் போட்டு மிதிக்கிறான் மனிதன் # சிகரெட்

எவ்வளவு பெரிய கவிஞனின் முதல் கவிதையும் காதல் கவிதையாகத்தான்
இருக்கும் # ஃபேக்ட்

கமலுக்கு வந்த பிரச்சினை இப்போது ரீலிசான் சண்டியர் படத்துக்கு வரவில்லையே ஏன்?

பசி கையில் காசு இல்லாதபோது வருவது ..


                                                                                             
கத்துக்குட்டி




இன்று காமராஜர் பிறந்தநாள்,.இந்த நாளை நினைத்தாலே எனது ஞாபகத்திற்கு வருவது எனது பள்ளியில் வருடாவருடம் நடைப்பெற்ற காமராஜர் விழா தான் ,...ஆறாம் வகுப்பு தான் முதன்முறையாக காமராஜர் பிறந்தநாளை எனக்கு
அறிமுகப்படுத்தியது,..அன்றிலிருந்து ஒவ்வொரு வருடம் நடைப்பெறும்
காமராஜர் விழாவிலும் நான் ஆசைஆசையாக பங்குகொள்வேன்.பேச்சுப்போட்டி , கட்டுரைப்போட்டி என அந்த நாளே கலகலக்கும்,..அதுமட்டுமல்ல ஒவ்வொரு காமராஜர் பிறந்தநாள் அன்றும்
பள்ளியின் சத்துணவில் போடும் முட்டையின் எண்ணிக்கை ஒன்றாக உயரும். நான் பத்தாவது படிக்கும்போது வாரத்திற்கு மூணு முட்டை
போட்டார்கள்,...அதுமட்டுமல்ல எனது பள்ளி இருந்த இடம் காமராஜர் நகர்
காலனி ,..பள்ளியின் பெயர் காமராஜர் உயர்நிலைப்பள்ளி,....எங்கள் பள்ளியை திறந்து வைத்ததே காமராஜர் தான் ,..அப்டி இருந்து காமராஜர் பத்தி போஸ்ட் போடாம இருக்கு முடியமா ,....


                                                                                    -கத்துக்குட்டி



ஃபைனல் இயர் ப்ளெஸ்மெண்ட்ல இருக்கற என் ஃப்ரெண்டுக்கு ,..”உன்னை நினைத்தது கண் ..உறவை நினைத்தது பெண் ,..” என்ற பாடலில் வரும்
யோஹோ என்ற கோரஸை கேட்கும் பொழுது எல்லாம் zoho,..zoho,..zoho,..
என்று தான் கேட்கிறதாம்,..

                                                                                                 -கத்துக்குட்டி




தன்னைத் தானே அழித்துக்கொண்டு தனது தடயத்தை பதிய வைப்பவன்,......
#####பென்சில்,.....................

(கத்துக்குட்டி : ஏன் சாக்பீஸ் , பல்பம் , கரித்துண்டுன்னு எழுதவேண்டியதுதானே,.....போஸ்ட்ட பாரு ,...தூ,...பொக்குனு மூஞ்சிலயே
குத்தனும்,....ஆனா இத எழுதுன என்னையே எப்படி குத்திக்க முடியும்,...)

                                                                                                -கத்துகுட்டி



இராத்திரி பண்ணிரெண்டு மணிக்கு மேல் எங்கள் ஹாஸ்டலின் பாத்ரூம்கள் பெரும்பாலும் என்கேஜ்டாக தான் இருக்கின்றன,.......ஹி,...ஹி....(உள்குத்து)

                                                                                                                 -கத்துக்குட்டி





இப்போதெல்லாம் டி.வி நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலும் ஸ்பான்சர் கல்வி
நிறுவனங்கள் தான்,.............
(courtesy : vijay t.v)
                                                                                       -கத்துக்குட்டி



ஒரு மாலில் உள்ள சின்ன புக் ஷாப்பில் நடந்த விஷயம் ...

விற்பனையாளர் : சார் , இந்த புக் எடுத்துட்டுப் போங்க சமையலுக்கு  
                                       தேவையான எல்லா டிப்ஸும் இருக்கு ,உங்க
                                       வொய்ஃப்க்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் சார்......
வாடிக்கையாளர் : (மைண்ட் வாய்ஸ் : ஏங்ங் ,... அவளுக்கு எதுக்கு...
                                         எனக்குதான் தேவைப்படுது....)


(  டேய் ...இனிமேல் இந்த மாதிரி மட்டமான போஸ்ட்லாம் போடுவியா ,..ஏன்
ஆம்பளைங்க சமைக்ககூடாதா ,.இனிமே.. இந்த மாதிரி பிற்போக்குத்தனமான
கருத்துகளைப் பரப்புன அவ்வளவு தான் மவனே,.....!!!!)


                                                                                                       -கத்துக்குட்டி




எனக்கு தெரிந்து கருணாநிதி , ராமச்சந்திரன் என்று பெயர்
வைத்திருப்பவர்களை கூட பார்த்திருக்கேன்,....
ஆனால் ஜெயலலிதா என்று பெயர் வைத்திருப்பவர்களை
இதுவரை பார்த்ததில்லை.....:-(

                                                                        -கத்துக்குட்டி



எனக்கு பொதுவாக தமிழில் வரும் காதல் படங்கள் பிடிப்பதில்லை ,....unfortunately தமிழில் வரும் அனைத்து படங்களும் ஏறக்குறைய காதல்
படங்கள்,...ஏன் அந்த படங்கள் பிடிக்கவில்லை என்றால் அதில் காதல்
புனிதமானது , பரிசுத்தமானது , தெய்வீக தன்மையானது , ஒரு முறை தான்
காதல் பூக்கும் மறுமுறை பூக்காது என்பது போன்ற நடைமுறையில்
சாத்தியமில்லாத போலித்தனத்தைதான் வெளிப்படுத்துகிறார்கள்,,...
உண்மையாக காதல் என்பது இயல்பானது ,இச்சைகள் கொண்டது ,
 அது எப்போதும் யார் மீதும் வரும் கல்யாணத்துக்குப் பிறகும் கூட , இப்படித்தான் இன்றும் நடைமுறையில் வாழும் மக்களிடத்தில் கூட இருந்து வருகிறது ,ஆனால் இந்த படங்கள் காதல் புனிதமானது என்ற போர்க்கொடியை மீண்டும் மீண்டும் தூக்கி பிடிக்கின்றன்,....அது இந்த இளைஞர்களுக்கு காதலை பற்றிய தவறான பார்வையைதான் உருவாக்குகிறது,............
உண்மையில் காதல் இயல்பானது , புனிதமாது அல்ல,...:-)

                                                                                                               -கத்துக்குட்டி






எங்கள் ஊர் சலூன்காரர்கள் மிகவும் பாவம்தான்,.....இன்னும் அக்குள்
முடியை சேவ் செய்துக்கொண்டிருக்கிறார்களே,........

                                                                                                           -கத்துக்குட்டி





எனக்குப் பொறாமை இல்லை என்று எழுத ஆசைதான் ,.............
ஆனால் இதை எழுதும்போதே ,.விரல்களும் , கண்களும்
பொறாமை கொள்கின்றனவே,............:-)

                                                                      -கத்துக்குட்டி



இலக்கை அடைவதை விட ,...பயணம் சிறப்பாக அமைவதே மேல்.............

                                                                                       -மூடர்கூடம்
தமிழ்மக்கள் கொண்டாடத் தவறிய ஒரு படைப்பு.:-(

                                                                                         -கத்துக்குட்டி

                                                                          




சுவரில் விளம்பரம் செய்வதை
தடுப்பதற்காக சுவறு முழுவதும்
எழுதினான்

“விளம்பரம் செய்யாதே...”

                                                          -கத்துக்குட்டி       
                                                    



                                                              சாமி

குலதெய்வ வழிபாடு தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒன்று...ஏன் தவிர்க்க
வேண்டும் ...கூடாது... குலதெய்வ வழிபாடு எளிய மக்களின் வழிபாடு , ஆதிக்கச் சாதியினரின் தடைகளிலிருந்து விடுப்பட்டு அவர்களுக்கு மட்டுமே
உரித்தான கடவுளின் வழிபாடு......,,,, எங்கள் குலதெய்வ கோயில் வழிபாட்டிற்காக மலைமீதுள்ள முனி கோயிலுக்கு சென்றோம்......நான்
பெரியவர்களின் நம்பிக்கையை எப்போதும் கெடுக்க விரும்புவதில்லை
என்பதால் சடங்குகளை சொல்வது போலவே செய்துவந்தேன்...ஆனால் எனது
தம்பியும் அவனது நண்பர்களும் அவ்வாறு இல்லை....சடங்குகளை
கிண்டல் செய்துகொண்டும் ,..... fb la photo போட செல்ஃபிகளை
கிளிக்கியவாறும் இருந்தனர்....சரியாக சேவலை காவு கொடுக்கும் சமயத்தில்
எனது ஒன்று விட்ட பெரியம்மாவுக்கு எப்போதும் வருவது போல சாமி
பிடித்துக் கொண்டது,,,.....அவரும் சாமியாடியவாரே குறி சொல்ல
ஆரம்பித்தார்...அவர் முறையே நான் எனது தம்பி , தாத்தா , பாட்டி ,பெரியம்மா
அக்கா என குறி சொல்லி வந்தார்,.....அவர் இதுவரை குடும்பத்துக்குள் குறி
சொல்லி வந்ததால் பிரச்சனை எதுவும் இல்லை,....சிறிது நேரம் கழித்து
அங்கே வந்திருந்த எனது தாத்தாவின் நண்பருக்கு குறி சொல்ல 
ஆரம்பித்தவுடனேயே தடுமாற ஆரம்பித்துவிட்டார்..அதை தொடர்ந்து
எனது தம்பியின் நண்பனுக்கு குறி சொல்லும் போது அவர் சொன்னது
எல்லாவற்றையும் இவன் நிராகரித்து கொண்டே வர சாமி அதிவிரைவிலேயே
மலை ஏறிவிட்டது,......இதற்கிடையில் பூசாரி வேறு பெரியம்மாவை பொய்
சாமி என்று சொல்ல அந்த நேரம் வேறு ஒரு சின்ன சலசலப்பு .
                          
                                      இதற்கு முன்பே நான் பெரியவர்களின்  நம்பிக்கையை கெடுக்க மாட்டேன் என்று சொன்னதால் இதுவரை நடந்த கூத்துகளுக்கு
நான் சிறிதும் சிரிக்காமல் முகத்தை சீரியசாக தான் வைத்துக் கொண்டேன்..
அப்படி வைத்துக்கொண்டதன்மூலம் சிறிது நன்மதிப்பையும் பெற்றுக்கொண்டேன் அது இக்கட்டுரையின் கடைசி அத்தியாயத்தில் தெரிய
வரும்..

                                     இதனால் எனது பெரியம்மா எல்லாரையும் ஏமாற்றிவிட்டார்
என்றும் நான் சொல்ல மாட்டேன்...இங்கு அவரது அடக்கிவைக்கப்பட்ட ஆளுமையை தான் நான் பார்க்கிறேன்,,,சாமி வந்தவுடன் அவர் எவருக்கும்
கட்டுக்கடங்காமல் ஆடும் ஆட்டமும் , தனது அப்பா , அம்மா யாரையும்
மதிக்காது அவர்களை வாடா , போடா , என்னாடி என்று அழைப்பதும்
அவருக்கு ஏதோ ஒரு விதத்தில் மன நிறைவைத் தந்திருக்க வேண்டும் .
எனது பெரியம்மா அதிகம் பேசி நான் பார்த்ததில்லை , ஆனால் சாமி
வந்து ஆடும் போதுதான் அவர் அடக்கி வைத்திருந்த பேச்சும் அவரது
ஆதங்கமும் வெளிப்படுகிறது,....இதனால் தான் என்னவோ எனது
பெரியம்மாவுக்கு மட்டும் மாதத்தில் பத்து தடவைக்கு மேல்
சாமி பிடிக்கிறது என்று நினைக்கிறேன்.....

                                             இரவு நான் ஊருக்கு கிளம்பும் சமயத்தில் வேறு
பெரியம்மாவுக்கு சாமி பிடித்தது,,,..வழக்கம்போல் படைத்த சாரயத்தை குடித்த
எனது தாத்தாவில் ஆரம்பித்து காலையில் தன்னை பழி சொன்ன சாமியார் வரை திட்டித்தீர்த்துவிட்டு என்னை பார்த்துச் சொன்னார் இவன் தான் என் பிள்ளை காலையில் எனக்காக முறையாக உழைத்தவன் இவனை நான்
நன்றாக வைத்திருப்பேன் என்று கூறி தீருநீர் வைத்து விட்டு வெகு நேரம்
சாமியாடியதால் களைப்பில் மலையேறினார்......................

                                                 இதில் என்ன மகிழ்ச்சியென்றால்  எனது பெரியம்மாவுக்கு இருந்த என்னை பாரட்ட வேண்டும் என்ற எண்ணம் இதன்
மூலமாவது நிறைவேறியதே என்பது தான்.....

                                                                                                  -கத்துக்குட்டி




ஏதேச்சையாக பார்த்த ராமானுஜம் படத்தின் டிரெய்லரில் பளிச்சென்று மனதைக் கவர்ந்த வசனம்...”ஸ்கூல்ல ஜீனியஸா இருக்கறவனை விட
எல்லா பாடத்தலயும் சராசரி மார்க் வாங்கி பாஸ் ஆகறவன் தான்
எங்களுக்கு வேணும்....”
                                          எப்படி நம்ப கல்வி முறை குமாஸ்தாக்கள
உருவாக்குதுனு பொட்டில் அறைஞ்ச மாதிரி சொல்லுது................
     
                                                                                     -கத்துக்குட்டி



இந்த தளத்தை படிப்பவர்களில் மதுரை வாசகர்கள் யாராவது இருந்தால்
இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்............காளவாசலில் உள்ள BIG BAZAAR யை ஒட்டியபடி ஒரு சின்ன சந்து போகும் அந்த சந்து முடியும் இடத்தில் ஒரு
சின்ன ஹோட்டல்  இருக்கும்.அது காலையில் கறிக்கடையாகவும் இரவு
ஹோட்டலாகவும் செயல்படும்.அங்கு தலைக்கறி.சுவரொட்டி,மூளை,ஈரல்,
நெஞ்சுக்கறி,கால் குழம்பு,பாயா,குடல்,நாட்டுக்கோழி............................................. என ஒவ்வொரு பாகமும் நாக்கு ஊரும் சுவையில்  கிடைக்கும்........அங்கு கிடைக்கும் இட்லி அவ்வளவு மிருதுவாக இருக்கும்....விலையும் நீங்கள் ஃபாஸ்ட் புட்டில் சாப்பிடுவதை குறைவாகதான் இருக்கும்.........

நேரம் கிடைத்தால் அங்கு சென்று சாப்பிட்டுவிட்டு வரலாம் கண்டிப்பாக
ஏமாற மாட்டீர்கள்.................................:)
                                                                                        -கத்துக்குட்டி



நம் கண் முன்னால் யார் வளர்ந்தாலும் மக்களுக்கு பிடிக்காது
என்பதை நன்றாக தெரிந்துகொண்டேன்.........
சிவகார்த்திகேயனை டி.வி யில் பிடித்தவர்களுக்கு
ஹீரோவாக பிடிக்கவில்லை....
(fact : பொறாமை)
                                            -கத்துக்குட்டி



”ஆறு வயதின் பேச்சும்
அறுபது வயதின் பேச்சும்
ஒரே மாதிரி தான் உள்ளது
இரண்டும் புரியாது
ஆறை ரசிக்கிறார்கள்
அறுபதை வெறுக்கிறார்கள்”
                                        -கத்துக் குட்டி

No comments:

Post a Comment