Saturday, July 5, 2014

                              அரிமா நம்பி-விமர்சனம்

தமிழ் சினிமாவில் டெக்னாலஜியை  பயன்படுத்தி ஒரு த்ரில்லர்.......
அறிமுக இயக்குனர் ஆனந்த் ஷங்கர் ஒரு புது களத்தை பிடித்ததில்
கவனம் ஈர்த்திருக்கிறார்..படத்தின் ஆரம்ப காட்சிகள் பார்த்து பழகியது
போல் உள்ளதால் சலிப்பை ஏற்படித்துகின்றன ...அதனால் படத்தினுடன்
ஒட்ட நமக்கு நேரம் பிடிக்கிறது.... படத்தின் புது புது ஐடியாக்கள்
நம்மை அடப் போட வைக்கின்றன..... ட்ரம்ஸ் சிவ மணி யின் பாடல்கள்
எழுந்து போக வைக்கின்றன..... பின்னணி இசை பரவாயில்லை......
என்னதான் படம் விறுவிறுப்பாக சென்றாலும் அதன் நீளம் நம்மை
கொட்டாய் விட வைக்கிறது........தமிழ்நாடு போலிஸீசிடம் இவ்வளவு
டெக்னாலஜி இருக்கிறதா என அவர்களே ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு
காட்சி அமைப்பு நம்மை யோசிக்க வைக்கிறது..............
அப்பா செத்த பிறகும் கூட பிரியா ஆனந்திடம் எவ்வித ரியாக்‌ஷனும்
பெரிதாக இல்லை....................இப்போல்லாம் என்னன்ன தெரியல
எந்த படமா இருந்தாலும் அதோட ட்விஸ்ட் நம்ப இசியா
கணிக்கறமாதிரி தான் இருக்கு இந்த படத்துலயும்..... படத்துக்கு
கூடுதல் கவனம் சேர்க்கறதே படத்தின் அடியாட்கள் தான்   லோக்கல்
ரவுடியுல இருந்து ஹை-டெக் ரவுடிகள் வரைக்கும் வரும் காட்சிகளில்
எல்லாம் அசர வைக்கிறார்கள்.....வில்லன் பரவாயில்லை.................
படத்தின் கேமராமேன் ராஜசேகருக்குதான் முழு கிரெடிட்டும் படத்தை
மொத்தமும் தன் தோளில் தாங்கியிருக்கிறார்...........விக்ரம் பிரபு புத்திசாலி
இளைஞன் கேரக்டருக்கு நன்றாக சூட் ஆகிறார்..........

                                      நல்ல விறுவிறுப்பான கதையை.. கொஞ்சம் நீளத்துடன்
கொடுத்திருக்கிறார்கள்...இந்த த்ரில்லரை நிச்சயமாக தியேட்டரில் சென்று
ரசிக்கலாம்.............................
                                எனது மதிப்பெண்    (5.5/10).......
                                                                    -கத்துக்குட்டி

No comments:

Post a Comment