Saturday, July 12, 2014

                                                          ரவுடி

அர்ஜுன் பிறந்தபொழுது மிக அழகாக இருப்பான்,..அதனால் அந்த ஏரியாக்காரர்கள் அனைவருக்கும் அவன்தான் செல்லப்பிள்ளை,.அவனை
எல்லோரும் தங்கள் வீட்டுக்கு கூட்டிச்சென்று கொஞ்சுவார்கள்,...அவன் தன்
தாயிடம் இருந்த நாட்களை விட மற்றவர்கள் வீட்டில் இருந்ததுதான் அதிகம் ,...
பள்ளிக்குழந்தைகள் கூட பள்ளி முடிந்தவுடன் இவனை கொஞ்ச நேராக இவனைத் தேடித்தான் வருவார்கள்,....இவன் அந்த ஏரியாவையே ஒரு
இளவரசன் போல அலங்கரித்துவந்தான்,....ஆனால் இவன் வளர வளர இவனது
குறும்புகளும் , சேட்டைகளும் அதிகரித்ததால் அந்த ஏரியா மக்கள் இவனை
வெறுக்கத் தொடங்கினார்,....இவனை பார்த்தாலே அஞ்சி ஒதுங்கினர்,...
அந்த பயம் அர்ஜுனுக்கு ரொம்ப பிடித்துப்போனதால் பெரியவர் , குழந்தைகள்
என பேதம் பார்க்காமல் அனைவரையும் பயமுறுத்தத் தொடங்கினான்,....எந்த
கடைக்கு சென்றாலும் யாரையும் மதிக்காமல் எடுத்து தின்றுவிட்டு திமிராக
செல்வான்,....இவனைப் பார்த்து இவனை மாதிரியே உள்ள நான்கைந்து பேர்
இவனுடன் சேர்ந்து கொண்டனர்,..தனது கூட்டத்தின் மூலம் அந்த ஏரியாவையே
பயமுறுத்தி வந்தான்,...இப்படி சுத்திக்கொண்டிருந்தவன் தீடிரென்று வெறிபிடித்து ஊர்மக்களை கடித்து குதற ஆரம்பித்தான்,,,..நாய் பிடிக்கும் வேன்
வந்து அவனை பிடித்துச் சென்றது,.....

                                                                                             -கத்துக்குட்டி 

No comments:

Post a Comment