Wednesday, July 9, 2014

                                         தற்கொலை

அர்ஜுன் தனது கைக்குட்டையை எடுத்து இரு பக்கமும் நன்றாக துடைத்துவிட்டு ,.........தண்டவாளத்தின் மீது வாட்டமாக படுத்துக் கொண்டான்,,,....தண்டவாளத்தின் மீது படுத்துக் கொண்டு தான் இதுவரை வாங்கியிருந்த கடன்களைப் பற்றி நினைக்க தொடங்கினான்,..........................
கிரெடிட் கார்டு லோன் ,
ஹோம் லோன் ,
பைக் லோன்,
எஜுகேசனல் லோன் ,
கல்யாணக் கடன் ,
மருத்துவக் கடன் ,
டூர் கடன்,
சரக்கு அடிக்க வாங்கிய கடன் ,
லவ் கிஃப்ட் கடன் ,
டாக் டைம் லோன் ,
நண்பனிடம் வாங்கிய பேனா , பென்சில் கடன் ,
பாட்டியிடம் வாங்கிய மிட்டாய் கடன் ,
ஒண்ணாவது நண்பனிடம் வாங்கிய ஒரு ரூபாய் கடன்,
        இப்படி அவன் வாங்கிய எல்லாக் கடனும் அவன் கண்முன்னேத் தோன்றியது . இவ்வளவு கடன்களை வாங்கிக் கொண்டு உயிருடன் வாழ்வதா
சாவதே மேல் என்று எண்ணி தண்டவாளத்தின் மீது மிகுந்த நம்பிக்கையுடன்
படுத்திருந்தான்,....பாண்டியன் எக்ஸ்பிரஸ் அவன் மீது மோதும் சமயத்தில்
அவன் கரண்ட் பில் கட்டாததால் , அதனால் ஃபேன் ஓடாததால் , அதனால்
கொசு கடித்ததால் கடைசி நிமிடத்தில் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டான்,,,................முதல் வேலையாக நண்பனுக்கு செலுத்தவேண்டிய 10 ரூபாய் டாக்டைம் கடனை  அந்நள்ளிரவில்
அடைத்தான்,..........
 
                                                                                        -கத்துக்குட்டி
                    

No comments:

Post a Comment